அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் விஜய்யின் ஒரே நோக்கமாக இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில் வெளியிட்டார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படவில்லை, பாஜக கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என்ற இரு முனைப் போட்டிதான்.திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக விஜய் வேலை செய்கிறார். அவரால் ஆட்சி வர முடியாது என்று தெரிந்தும், அவர் திமுக அகற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் அவரின் ஒரே நோக்கமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.









